search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் கவர்னர்"

    ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துகொண்டு பாஜகவுக்கு வாக்களித்து மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என பிரசாரம் செய்த கல்யான் சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressdemands #KalyanSingh #Governorpost
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநில முதல் மந்திரியாக 1991-92 காலகட்டத்தில் பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாஜகவை சேர்ந்த இவர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த 23-ம் தேதி அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கல்யாண் சிங், ‘நாம் அனைவருமே பாஜக தொண்டர்கள்தான். இந்த தேர்தலில் பாஜக மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வர வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியம்’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி இன்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘மதிப்புக்குரிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் ஒரு அரசியல்வாதியைப்போல் பாஜகவுக்கு வாக்கு கேட்பது அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து மரபுகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கவர்னர் அலுவலகத்தின் தரத்தையே அவர் குறைத்து விட்டார்.

    நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்மீது சிறிதளவிலாவது மரியாதை இருந்தால் ஒருகனம் கூட தாமதிக்காமல் கவர்னர் பதவியில் இருந்து கல்யாண் சிங் விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Congressdemands #KalyanSingh #Governorpost
    சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாமியார் ஆசாராம் பாபு, தண்டனையை குறைக்குமாறு ராஜஸ்தான் கவர்னருக்கு கருணை மனு அளித்துள்ளார். #Asaram #MercyPlea #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே, 16 வயது தனது சீடரை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர் தனது பல்வேறு பெண் சீடர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழ்ந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபுவுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    தாம் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்ட சாமியார் ஆசாராம் பாபு, தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். இந்நிலையில், தனது ஆயுள் தண்டனையை குறைக்குமாறு ராஜஸ்தான் கவர்னருக்கு கருணை மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் வயது மூப்பின் காரணமாக தனது ஆயுள் தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறைத்துறை, காவல்துறைக்கு அனுப்பப்பட்டு, பதிலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

    ஆசாராமின் கருணை மனு மீது மேற்கண்ட நிர்வாகம் பதிலளித்த உடன், மனு சிறைத்துறை பொது இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Asaram #MercyPlea #Rajasthan
    ×